இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் தீவிரவாதிகள்!

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் […]

மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழுவில் தாம் முன்னிலையாகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியும் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் வெளிப்படுத்துமாறு ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழு முன்னிலையில் தாக்குதலைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்றும் , பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது […]

வவுனியாவில் தப்பி சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த இளைஞர்கள்

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை துரத்திப் பிடித்த பிரதேச இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று , வேப்பங்குளம் பகுதியில் பின்புறமாகப் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது […]

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் சேவை ஊழியர்கள்

தபால் சேவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க தவறினால் எதிர்வரும் 22ம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக தபால் மா அதிபருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதியில் இருந்து 22ம் திகதி வரை தொடர்ச்சியான […]

சம்பந்தனின் வீடினை ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றுகை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியே திருகோணமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் உறுப்பினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் […]

சிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்!

பிக் பாஸில் இன்று கமல்ஹாசனை கொண்டாடும் இலங்கையர்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகின்றோம். 1980ஆம் ஆண்டுகளில் ஆரம்பம். கமல் சினிமாவில் உச்சத்திற்கு போயிருந்தக் காலம். அப்போது இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குச் சுற்றுலா போயிருந்த எம்மவர் சிலர் சில நடிகர்களை சந்தித்து படம் எடுத்து விட்டு கமல்ஹாசனையும் சந்திக்க அவரது வீட்டிற்கு போயிருக்கிறார்கள். வாசலில் நின்ற காவலாளி உள்ளே விடவில்லை. சத்தம் கேட்டு வெளியே வந்த கமல் “என்ன பிரச்சினை என்று […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.07.2019

மேஷம்: இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். […]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கூறியிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தது. சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட […]

இன்று காலை தொடருந்து மோதியதில் 10 மாடுகள் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்து மோதி 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து ஒன்றே , கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியதாக தெரிவிக்கபடுகின்றது.

தென் மாகாண பாடசாலைகளின் கடமை நேரம் அதிகரிப்பு

தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 7.30 மணிக்கு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி, பி.ப 2.30 மணிக்கு நிறைவுப் பெறும் என, ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அறிவிப்பு, சகல கல்வி வலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சங்கங்கள் இதற்கு எதிர்ப்புத் […]