இலங்கை செய்திகள்

மண்ணில் புதைந்த சிறுமிகள்

கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்துள்ளன. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் பொதுமக்கள் என பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்னும் மாயமானவர்களை தேடும் பணியும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீட்பு படையினர் கட்டியணைத்தபடியே இறந்து […]

ரணில் விக்கிரமசிங்க

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு!

மயிலிட்டி துறைமுகம் நாளை மக்களிடம் கையளிப்பு! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று அவர் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார். பிரதமருடன் இந்த விஜயத்தில் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது. இன்று அவர் வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­ தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல் அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார். அதோடு நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ள […]

கருணா

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பெண்பித்தன் கருணா !

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் பெண்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருக்க வேண்டுமெனவும், வெளியே செல்வதாயின் தனிமையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காமப்பித்தன் என பலராலும் வர்ணிக்கப்படும் கருணா வயோதிபப் பெண்களையே இலக்கு […]

வடிவேலு துளசிகா

யாழ் வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு

யாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர். இதேவேளை தந்தை உயிரிழந்த நிலையில் மகளும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் கந்தன்

நல்லூர் கந்தன் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்!

ஈழமணித்திருநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாட்டில் வாழும் அடியவர்களும் புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை காண குவிந்துள்ளார்கள். எனினும் படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் அலங்காரக்கந்தனை கண்டு களித்துவருகின்றனர். எத்தனையோ இடர்களை தாண்டி தன்னை நாடிவரும் பக்தர்களை கந்தன் கைவிடுவதேயில்லை. ஏதோ ஒரு வகையில் அவர் பக்தர்களிற்கு அருட்காட்சி கொடுத்தவண்ணமே உள்ளார். அந்தவகையில் இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு தென்படுவது என்ன? கோபுரத்திற்கு […]

கோத்தபாய ராஜபக்­வின் வெள்ளை வான்களுக்கெதிராக மக்களை அணி திரட்டுவோம்

கோத்தபாய ராஜபக்ஷவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளை கைவிட்டு விட்டு நாட்டைவிட்டு ஒரு போதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷவை தோற்கடிக்கும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் […]

உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாது

உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா […]

கோத்தபாய

எனது வெற்றிக்கு தமிழ் மக்கள் தேவை : கோத்தபாய

எனது வெற்றிக்கு தமிழ் மக்களது வாக்கு அவசியம் இல்லை என்று தாம் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோத்தபாய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்திருந்தார். இதன்போது தமிழ் மக்களின் வாக்குகள் […]

எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக் கூடியவரே-ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்

எதிரணி வேட்பாளரை தோற்கடிக் கக்கூடிய, பலமிக்க ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பலர் உள்ளனர். பிரதமர் ரணில் […]

ஒழுக்கமும் கட்டுப்பாடும் பிரபாகரனிடம் நிறைந்திருந்தது-மகிந்த

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்திருந்ததென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைப் புரிந்து கொண்டே அரசியல் தீர்வுத் திட்டத்தை தேட வேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு […]