இலங்கை செய்திகள்

போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றது. கொள்­க­லன்­க­ளில், லொறி­க­ளில் போதைப்­பொ­ருட்­கள் […]

ஜனாதிபதி

எல்லோா் மீதும் காட்டும் இரக்கமும், கருணையும் வெற்றியைத் தரும்!

மனித நேயத்தை முன்னிலைப்படுத்திய உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெய்வீகத் தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக் கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்றும் அவர் […]

ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல!

யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘ வடமாகாணத்தில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றாலேயே ஆவா குழு உருவாகியுள்ளது. இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என […]

சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்!

தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழான டெயிலி மிரர் இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் சந்திப்பில் அமைச்சரான சுமந்திரன் பங்கெடுத்ததாக கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து கொழும்பு தொலைச்காட்சியான சக்தி தொலைக்காட்சி இதனை வெளிப்படுத்தி சுமந்திரனிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது. தமிழர் விடயங்களை விட ஆளும்தரப்பு விடயங்களில் அதிக […]

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. குறித்த கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. புதிய தேர்தல் முறை பற்றிய விடயங்கள், தேர்தலின் போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதில் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த கருத்தரங்கில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ […]

இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி […]

எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.!

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கவும் தயங்க மாட்டோம் […]

மைத்திரிபால சிறிசேன

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் கடுவெல நகர வாராந்த சந்தைக் கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு […]

எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் வைத்து நேற்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்த இள­நீர் விற்­பனைத் திட்­டம்

முல்­லைத்­தீ­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் பொருட்டு இள­நீர் விற்­ப­னைத் திட்­டத்துக்காக மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் 5 லட்­சம் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளார். முல்­லைத்­தீ­வில் போரால் பாதிக்­கப்­பட்டு உடல் உறுப்­பு­களை இழந்த பலர் வறு­மை­யில் வாடு­கின்­ற­னர். அவர்­க­ளின் அன்­றாட பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கோடு இந்தத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக துரை­ராசா ரவி­க­ரன் தனது பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நிதி ஒதுக்­கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்­கீட்­டைச் செய்­தி­ருந்­தார். இந்த திட்­டத்துக்குள் இரு­பத்­தி­யொரு […]