சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் […]
இலங்கை செய்திகள்
இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை
மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” […]
ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி
பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு […]
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் […]
பொம்மை வெளி குடி தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு
பொம்மை வெளிப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அந்தக் கிணறு அமைக்கப்பட்டால் பொம்மை வெளியில் உள்ள மக்களின் குடி தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ்ப்பாண மா நகர சபை ஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மை வெளிப்பகுதியில் குடியி ருக்கும் மக்கள் அந்தப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் அமைக்கப்பட்ட நீர்க் குழாயில் இருந்து வரும் தண்ணீரையே தமது தேவைகளுக்காகப் […]
தேவையானளவு மழை கிடைத்தும் எவருமே அதைச் சேமிக்கவில்லை
தேவையான மழைவீழ்ச்சி கிடைத்தும் எவருமே மழைநீரைச் சேமிக்கவில்லை. இயன்றளவு மழைநீரை கடலுக்கு அல்லது தமது பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதிலேயே சகலரும் குறியாக இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாணம் திருநெல்வேலி யிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த வருடங்களைவிட இந்த வருடம் தேவையான அளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் அதைச் சேகரிப்பதற்கான திட்டம் இல்லை. மழை நீரைச் சேகரிக்காவிடின் அது […]
அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட […]
நாட்டில் கடும் நிதி நெருக்கடி சபையை உடன் கூட்டுங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மகிந்த அணியான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவே சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் முதல் நாட்டில் கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி மூலதன சந்தையும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பெற்றுக்கொண்ட 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்னமும் […]
மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு 26.12.2017
சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அலகு ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர்,மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் சாந்திபுர கிரம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.யோசப் தர்மன் உற்பட பொது மக்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என […]
சிங்கப்பூருடன் இனிமேல் கட்டுப்பாடற்ற வர்த்தகம்
சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ சின்லுத் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சிங்கப்பூருக்கும், இலங்கைக்கும் இடையிலான கட்டுப்பாடுகள் இல்லாத வர்த்தக உடன்படிக்கை ஒன்று அப்போது கைச்சாத்திடப்படவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பையேற்று அவரின் பயணம் இடம்பெறவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை சிங்கப்பூர் தலைமை அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். நல்லாட்சி அரசு அமைய […]





