கிளிநொச்சியையும், முல்லைத்தீவையுமே மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டது. யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். ஈவெயாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போரை வென்றதாகக் கூறுகின்றார்கள். போரின் மூன்றில் இரண்டு பங்கை யார் முடித்தது. யார் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியது? எனது அரசு ஆட்சியை பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து […]
இலங்கை செய்திகள்
கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்தளை பகுதி நோக்கி வாகனங்கள் வெளியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்தேச புதிய களனி பால நிர்மாணப் பணிகளுக்காக இந்த இரு வெளியேறும் பாதைகளும் இவ்வாறு மூடப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டது. அதன்படி இன்று முதல், கட்டுநாயக்க அதிவேக பாதை ஊடாக களனி, பேலியகொடை பகுதிகளுக்குள் வருவதற்கு பேலியகொடை வெளியேறும் […]
கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்காவில் பழைய முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பழுதடைந்த நிலையில் பழைய முறிகண்டிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் ரக வேன் […]
இராமநாதபுரம் தாக்குதல்: தாயும், மகனும் மறியலில்
இராமநாதபுரம் – மாயவனூர் பகுதியில் மூன்று வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் தாயாரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – என்று இராமநாதபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: மாயவனூர்ப் பகுதியில் இருதினங்களுக்கு முன்னர் இரவுவேளையில் வீடுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஏழு பேர் கொண்ட குழு வீடுகளுக்குள் புகுந்து தாக்கியது. […]
பூநகரியில் நள்ளிரவு விபத்தில் ஒருவர் சாவு!!
பூநகரி, செல்விபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்குக் காரணமானது எனக் குற்றஞ்சாட்டப்படும் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். சாரதியைக் காப்பாற்றுவதற்காக விபத்துக்குக் காரணம் உயிரிழந்தவர் பயணித்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) மாட்டுடன் மோதுண்டதே என்று பொலிஸார் ஏமாற்ற முற்படுகின்ற னர் எனச் சந்தேகம்கொண்ட உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்கமாட்டோம் என்று கூறிப் போராட்டம் நடத்த முற்பட்டதால் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் […]
புதிய அரசமைப்பு நிறைவேறாது ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்ற செய்தி பெப்ரவரி 11ஆம் திகதி வருமாக இருந்தால், புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது போகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்திருந்த ஆணையை மக்கள் மீளவாங்கி விட்டார்கள் என்ற செய்தி வரக்கூடாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். […]
குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!
முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 78 முதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதலானோர் ஆண்கள் என இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆண் முதியவர்கள் 44பேரும் பெண் முதியவர்கள் 34பேரும் கடந்த ஆண்டில் இல்லத்தில் இணைக்கப் பட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சேர்க்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது […]
வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் மற்றும் நாயாற்றுப் பகுதி ஆற்றுத்தொடுவாயில் இறால் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. மீனவர்கள் இரவு பகலாக இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. வட்டுவாகல், நந்திக்கடல் ஏரிகளில் பிடிக்கப்படும் இறால்களுக்கு மக்கள் மத்தியில் தனிக்கிராக்கி உண்டு. ஆனால் இப்போது அவற்றை மக்களால் ருசிக்க முடியவில்லை. காரணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தநிலையில், மாவட்டத்திலுள்ள களப்புகளில் இறால் மற்றும் மீன்பிடித் தொழில் செய்யவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளவது […]
தையல் நிலையத்துக்கு விசமிகளால் தீ வைப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைக் சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்தது என தையலகத்தின் உரிமையாளர் குற்றஞ்சாட்டினார். தொடர்பில் உரிமையாளர் தெரிவித்ததாவது: 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் […]
போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை
நீண்டகாலப் போரால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடிய மாற்றங்கள் இன்னமும் ஏற்படவில்லை – என அமெரிக்க மிசன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனோக் புனிதராஜ் தெரிவித்தார். அராலி தேவாலயத்தில் புதுவருட நள் ளிரவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மறையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் ஆயுதமோதல் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நான்காவது […]





