இலங்கை செய்திகள்

விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை அடங்கிய தொகுக்கப்படாத காணொளி காட்சிகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 5 இலத்திரனியல் ஊடகங்ளுக்கு உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், […]

கரும்புலிகள் தினம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை?

கரும்புலிகள தின நிகழ்வினை நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் பல இடங்களில் கடந்த 5ஆம் திகதி கரும்புலிகள் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, கிளிநொச்சி – அக்கரயான்குளம், ஸ்கந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வீதிகளில் உயிர் நீத்த கரும்புலி உறுப்பினர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கு ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் கரும்புலிகள் தின […]

விஜயகலா

அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார். சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளில் மீள்வருகை குறித்து பேசியிருந்தார். இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி […]

பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது?

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் […]

ஜாமீனில் வெளியே வருவோர்

நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள்! இலங்கையில் நடந்த விசித்திரம்

கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். அதன் பின்னர் வங்கியைக் கொள்ளையிடுமாறு பணித்தார். அதன் அடிப்படையில் நான் வங்கியைக் கொள்ளையிட்டேன். இன்று நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்லுமாறு கடவுளே பணித்தார்.” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார். […]

சஜித் தொடர்பில் விஜயகலா

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்று […]

அவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது!

தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவர்களின் அன்பின் அடிமைகளாக ஆண்டாண்டு தோறும் அவதியுற நேரிடும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரத்னப்பிரிய […]

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் […]

விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் […]