இலங்கை செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாணம் விரையும் ரணில்

யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியகளுக்குரிய நியமனங்களை பிரதமர் வழங்கி வைப்பார் என வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தொணடர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விகர்மசிங்க தலைமையில் நடைபெறவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணஙகளிலும் […]

9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…

யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் […]

இலங்கை விவசாயிகள் வயலில் இறங்குவதில்லை

அபிவிருத்தி இலக்கை அடைய வேண்டுமாயின் இலங்கையை தொழிநுட்ப துறையில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இலங்கையின் மனித வளத்தின் பலவீனம் காரணமாக வெளிநாட்டவர்களை சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு அழைத்து தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர். எமது நாட்டில் கணனி செயலிகளை உருவாக்குபவர்கள், தேயிலை, இறப்பர், ஆடை உற்பத்தி ஆகிய […]

வடக்கில் இராணுவத்தை இலக்கு வைத்த விக்னேஷ்வரன்! அடுத்து என்ன??

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகள் உட்பட தகவல்களை கோரினால், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் அரச அலுவலகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் யூலை 12 ஆம் திகதியான இன்று […]

வடமாகாணத்தை முன்னேற்ற நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கைஅரசு முட்டுக்கட்டை – சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம் என வடமாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு […]

நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் […]

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!!

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான கார­ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மாகாண சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.திரு­வா­க­ர­னைத் தொடர்­பு­கொண்டு கேட்­டோம். ‘குழந்த பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பயங்­க­ர­வாத குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் […]

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­சமைப்­பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல், அரச கரும மொழி­கள் மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கனே­சன் தெரி­வித்­தார். ஐ. டப்­ளியூ.பி.ஆர். எனப்­ப­டும் போர் மற்­றும் சமா­தா­னம் தொடர்­பி­லான அறிக்­கை­யி­டல் கற்கை நிலை­யம் சார்­பாக, அமைச்­சர் மனோ கணே­சனை அமைச்­சில் நேற்றுச் சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: புதிய அர­சமைப்­பைக் கொண்­டு­ வ­ரு­வ­தில் தலைமை அமைச்­ச­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் எந்த ஆர்­வ­மும் […]

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் […]

வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் சபை­யின் வாச­கம் அடங்­கிய வர­வேற்பு வளைவு அமைப்­பது எனத் தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டது. நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை தவி­சா­ளர் முன்­மொ­ழிந்­தார். பிரே­ர­ணை­யில் தெரி­வித்­தா­வது: சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளில் வர­வேற்பு வளை­வு­களை நிறுவத் தீர்­மா­னித்­துள்­ளோம். அதைப் பிரே­ர­ணை­யாக இந்தச் சபை­யில் முன்­மொ­ழி­கின்­றேன். இதை […]