பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும்: ஜனாதிபதி மகளிர் தின வாழ்த்து செய்தி
நாட்டின் நிலையான அபிவிருத்தி முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முகாமைத்துவம் மற்றும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம் கடந்த இரு வருட காலத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மகளிர் இயக்கங்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.




