மத வைபவங்களே பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்தும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அரசாங்க அனுசரணையுடன் நடாத்தப்படும் மத வைபவங்கள் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மீலாத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை பல்வேறு இனங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்த மதக் கோட்பாடுகளை பின்பற்றும் மக்களைக் கொண்ட தேசமாகும்.

இந்நாட்டின் வரலாற்றுக் காலம் தொடக்கம் மத வைபவங்கள் ஊடாக சகவாழ்வை கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *