இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார் இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கல்வி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த […]
Other News
விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு
விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசு சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே குற்றம் சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள் பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை வழங்காமையினால் விரிவான […]
போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு
போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை
நாளைய ஜெனிவா மாநாட்டுக்கு ஹர்ஷ டி சில்வா தலைமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது நாளை புதன்கிழமை விவாதம் நடைபெறும்போது, அரச தரப்புக் குழுவுக்கு பிரதி வெளிவிவாகர அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை தாங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் இன்று ஜெனிவா நோக்கி புறப்பட உள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் […]
குற்றவாளிகள் தப்புகின்றனர்! – குமாரபுரம் படுகொலை வழக்கு குறித்து ஜெனிவாவில் அறிக்கை
குற்றவாளிகள் தப்புகின்றனர்! – குமாரபுரம் படுகொலை வழக்கு குறித்து ஜெனிவாவில் அறிக்கை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையில் உள்ளன என்று எடுத்துரைக்கும் அறிக்கை நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது. குமாரபுரம் படுகொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புக்கள் அதில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இலங்கை மக்களின் சமத்துவ அமைப்பால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. காணாமல்போனோர், தமிழர் படுகொலைகள் உள்ளிட்ட […]
கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்! – நல்லிணக்க செயலணி நம்பிக்கை
கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்! – நல்லிணக்க செயலணி நம்பிக்கை “இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதன் மூலமே தீர்மானத்தில் உள்ள ஏனைய விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியும். அரசுக்கு இந்தக் காலப் பகுதியில் அழுத்தங்களைப் பிரயோகித்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும்.” – இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவித்தார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நல்லிணக்க செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி […]
நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்!
நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்! மஹிந்த அணியின் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஜெனிவாவில் கடும் மோதல் இடம்பெற்றது. இந்த மோதல் காரணமாக, சரத் வீரசேகர ஏற்பாடு செய்திருந்த பக்க நிகழ்வு இறுதியில் அவராலேயே கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றச்சாட்டு ஆதாரங்களுடன், மஹிந்த அணியினர் ஜெனிவாவை களமிறங்கியுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]
முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன நிர்வாகத்தெரிவுகள்
முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சம்மேளன நிர்வாகத்தெரிவுகள் கடந்த 18.03.2017 சனிக்கிழமை அன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட இளைஞர் சம்மேள நிர்வாக தெரிவுகள் இடம்மெற்றன. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னைய தலைவர் கி.தரணீதரன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்,அதனைத்தொடர்ந்து தலமையுரை இடம்பெற்றது, பின்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிக்குமார் அவர்களால் கடந்த ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து மாவட்ட உதவிப்பணிப்பாளர் k.சரோஜா அவர்களால் தேசிய […]
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவு
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை : கணவனின் இரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவு ஊர்காவற்துறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவன் மற்றும் அயலவரின் இரத்தமாதிரிகள் ,மரபணு பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ள இரண்டு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் தீர்வு கிடைக்காமல் தொடர்கின்றன. வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். “எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை […]





