டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை தின்று, இன்று போராட்டம் நடத்தினர். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் 44ஆவது நாளாக இன்று நீடிக்கிறது. நாள்தோறும் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித […]
Other News
என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே ?
வேறு சமூகத்தினரின் தெருவில் இருச்சக்கர வாகனத்தில் சென்றதற்காக, தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் புதன்சந்தை அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தீரஜ்குமார். இவர் கடந்த 22-ம் தேதி மற்றொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தெரு வழியாக, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நாகுல், பொம்மாயி ஆகியோர், தீரஜ்குமாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் […]
பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை
நெல்லை சந்திப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு, 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் அச்சமடைய வைத்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் வல்லவன். இவரது மனைவி கோமதி. நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருமண பத்திரிக்கை வைப்பது போல் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர், கோமதியை கட்டையால் தாக்கினர். பின்னர் வீட்டிலிருந்த […]
ஜெயலலிதா இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாதவர் கமல்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாத கமல்ஹாசன், தற்போது ஏன் விமர்சித்து வருகிறார் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 11-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வளர முதன்முதலில் பிரசாரம் செய்தேன் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா […]
தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற அதிமுக பிரமுகர்!
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் விஷம் வைத்து 15 தெரு நாய்களை கொன்ற அதிமுக பிரமுகர் மீது வழக்கு தொடரக் கோரி தேசிய விலங்குகள் நல வாரியத்தினர் புகார் அளித்துள்ளனர் சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலப்பாக்கத்தில், அதிமுக பிரமுகர் அண்ணாதுரை வசித்து வருகிறார். தமது வீட்டில் வளர்த்து வரும் கோழிகளை தெரு நாய்கள் துரத்துவதால், ஆத்திரமடைந்த அவர், கடந்த 25-ஆம் தேதி, இறந்த கன்று குட்டி உடலில் விஷத்தை கலந்து வயல்வெளியில் […]
முதல்வர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களும் செல்லாது
ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழைக் கைப்பற்ற முயன்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு, தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் தனியார் சொத்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றைக் கைப்பற்ற முயற்சி நடக்குமானால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தனியார் […]
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி கூறியபடி ஜனநாயக முறைப்படி திமுக ஆட்சியை பிடிக்குமே தவிர கொள்ளைப்புறம் வழியாக அல்ல எனத் தெரிவித்தார். குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு […]
கடவுளை தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது
கடவுளை தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது என அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடவுளைத் தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும், உண்மைக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றார். தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம் நடைபெறுகிறது. மக்களை காப்பற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு 19 எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் தங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல இந்திய துணைக் […]
தேர்தலை சந்திக்கின்ற சூழலில் தமிழகம் இல்லை
மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் சூழலில் தமிழகம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உடனே தேர்தலை சந்திக்கின்ற நிலையில் தமிழகம் இல்லை. ஓராண்டுக்கு முன்னர் தான், நாம் தேர்தலை சந்தித்து இருக்கிறோம். இரண்டு அணிகள் இணைந்திருக்கிறார்கள். சிறிது கால அவகாசம் கொடுக்கலாம். மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு தயாராக இருக்கிறது. அதனால் அதிமுக-வை சேர்ந்த இரு அணிகளும் இணைந்ததை […]
நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு
திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கப்பட்டதை கண்டித்து, டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் மேயர் மருதராஜை நீக்கிவிட்டு, தங்கதுரை மற்றும் நல்லசாமி ஆகியோரை டிடிவி தினகரன் நியமித்தார். இதனைக் கண்டித்து எம்ஜிஆர் சிலை முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர், தினகரனின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் […]





