Other News

புதிய அரசமைப்பு எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு சுபீட்சம் அடையும்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையில் அனைவரும் சம பிரஜைகளாக வாழக்கூடிய புதிய அரசமைப்பு எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இந்த நாடு சுபீட்சம் அடையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “புதிய அரசமைப்புக்கான முயற்சியில் நாம் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டிலே ஒரு இன ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசமைப்பின் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் […]

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம், அரியாலை, மணியம்தோட்டத்தில் உதயபுரம், கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்றோர் வழிமறித்துச் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினால் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட டொன் பொஸ்கோ ரிஷ்மன் (வயது – 24) என்ற […]

மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டது கூட்டமைப்பு !

புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தை தற்போது அது கைவிட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைமீது அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், நாட்டில் நல்லிணக்கம் நிலவுவதற்கும் புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் […]

இலங்கையை இறுக்கிப்பிடிக்கத் தயாராகிறது ஐ.நா.!

உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு ஆமைவேகத்தைக் கடைபிடித்துவருவதால் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரால் இன்றைய தினம், இலங்கை அரசுக்குக் கடுந்தொனியிலான செய்தியொன்று விடுக்கப்படும் என்றும், அதுவே ஐ.நாவின் இறுதி எச்சரிக்கையாகக்கூட அமையலாம் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சமூக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டுவார கால பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள […]

ஜனாதிபதி

மைத்திரியின் செயல் அரசியல் கைதிகளின் சிக்கலை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி!

“அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தும்கூட, அவர்கள் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மாறாக ஏனைய சிலரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியதானது அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் திசை திருப்பும் மற்றும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியேயாகும்.” – இவ்வாறு பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து விடுத்துள்ள ஊடக […]

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளேன்

சமூக வலைத்தளமான முகநூலில் #metoo என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் #metoo என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியுள்ளதாக பதிவிட்டதுடன், இத்தகைய பாலியல் சீண்டல்களை தடுக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். Loading…

பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சூடு

அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூட, ராகுல் காந்தி ‘டுவிட்’களுக்கு ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மறுடுவிட் வருவதை கிண்டல் செய்து, ‘‘ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?’’ என கூறி இருந்தார். இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி., செய்தி […]

வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு

நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘‘ சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என கேட்டுக் […]

வரிவிகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்

நாடு முழுவதும் ஒரே மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோ‌ஷத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரி முறையை ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகித்து வருகிறது. இந்த வரி முறையில் இருந்து உணவு தானியங்கள், பால், பழம் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி பொருட்களுக்கு, சேவைகளுக்கு 5, 12, 18, […]

கச்சத்தீவை - சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– உங்களது ஊழலுக்கு எதிரான போர் பற்றிய உறுதிமொழிக்கும், குறிப்பாக உயர்மட்டத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வழக்கு பதிவு செய்தமைக்காகவும் நாடு பெருமை கொள்கிறது. அதேசமயம் இந்த வழக்குகள் விசாரணையில் மிதமிஞ்சிய தாமதம் ஏற்படுவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக ஏர்செல்–மேக்சிஸ், சாரதா சீட்டு கம்பெனி, ராபர்ட் வதேரா […]