Other News

இன்றைய ராசிபலன் 23.10.2017

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ரிஷபம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு […]

ஸ்பெயின் முடிவுகளை ஏற்கமாட்டோம் – கேடலோனியா தலைவர்

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயின் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என கேடலோனியா அரசுத் தலைவர் கார்லஸ் புஜ்டெமோண்ட் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியான கேடலோனியா தனிநாடாக மாற இம்மாதத் தொடக்கத்தில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. மாகாண அரசும், பல்வேறு அமைப்புக்களும் இந்த வாக்கெடுப்பை நடத்தின. ஆனால், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் அரசும், உச்சநீதிமன்றமும் அறிவித்தன. இதைத் தொடர்ந்து மாகாண அரசின் அதிகாரங்களைக் குறைத்து ஸ்பெயின் பிரதமர் ரஜோய் […]

ஓவியாவிற்கு இலங்கையிலிருந்து வந்த பரிசு!!! என்ன தெரியுமா?

தமிழில் சிறிது நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து கொண்டிருந்தார் ஓவியா. வேறு வழி இல்லாமல், தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. Loading… அவரின் நேர்மைக்காகவே தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்ததால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக […]

“தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!” – யாழில் செவ்வாயன்று மீண்டும் போராட்டம்

தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து […]

இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை குழப்பியடிக்கத் தயாராகிறது மஹிந்த அணி!

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த அணியான பொது எதிரணி போராட்டம் நடத்தவுள்ளது. விவாதம் ஆரம்பமாகும் 30ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாகவே குறித்த போராட்டத்தை நடத்துவதற்கு மஹிந்த அணி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாரிய அளவிலான மக்கள் தொகையையும் அந்தப் […]

மைத்திரி – மஹிந்த விரைவில் நேருக்கு நேர் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பொது எதிரணி பக்கமிருக்கும் சு.க. உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, சு.கவின் மூத்த அமைச்சர்களின் மத்தியஸ்தத்துடன் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன்போது இணைந்து பயணிக்க வருமாறு மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஜனாதிபதி மைத்திரி […]

தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசமைப்பே உருவாக வேண்டும்!

“வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சியை ஏற்றுக்கொண்ட அரசமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழ் பேசும் மக்கள் மிகுந்த […]

யாழ். பல்கலை

அரசியல் கைதிகள் விடயம்: விரைந்த தீர்வு அவசியம்

அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- “இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு […]

யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் […]

நவீனமயமாகும் ராணுவ மையங்கள்…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் […]