Other News

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை […]

உலகம் முழுவதும் வாட்ஸ் – அப் சேவை முடங்கியது!

பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக செய்திகள் செல்லாத நிலையே நீடித்தது. வாட்ஸ்-அப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க தொடங்கினர். சர்வர் பிரச்சினை காரணமாகவே வாட்ஸ்-அப் செயலி செயல்பாட்டில் பிரச்சினை நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் செயலியில் செய்திகள் மட்டும் நகர்வின்றி காணப்பட்டது. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வாட்ஸ்-அப் […]

கார் பதிவு மோசடி – தவறான செய்தி; அமலாபால் அறிக்கை

நடிகை அமலாபால் கார் பதிவில் மோசடி செய்ததாக வெளியான செய்தி தவறு என கூறி அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை அமலாபால் கார் பதிவில் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து அதுகுறுத்து விசாரிக்க பாண்டிச்சேரி ஆளுனர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்நிலையில் அமலாபால் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு, தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி மலபார் பகுதியின் […]

நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் […]

தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? – ரமணன் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “சென்னையில் ஏறக்குறைய 12 மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது […]

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று பிரதமர் மோடி

புதுடெல்லியில் உலக உணவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தொழில் வர்த்தகம் செய்வது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. உலக வங்கி தொழில் வர்த்தகத்துக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்ட […]

கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் […]

சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் அனுப்­பி­னால் வர­லாறு சிங்­க­ளக் கட்­சி­களை மன்­னிக்­காது

தமி­ழர்­க­ளின் தலை­வ­ரான இரா.சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் வடக்­குக்­குத் திருப்பி அனுப்­பி­னீர்­கள் என்­றால் சிங்­க­ளக் கட்­சி­களை வர­லாறு மன்­னிக்­காது என்று தெரி­வித்­தார் அமைச்­சர் மனோ­க­ணே­சன் மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம், தமி­ழர்­க­ளைக் கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்­றார். சம்­பந்­தனை, இலங்கை நாட்­டையே கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்று சொல்­லும் நில­மைக்­குத் தள்ளி விடா­தீர்­கள். அவ­ரைப் பல­வீ­னப்­ப­டுத்தி, தீவி­ர­வா­தி­களை பலப்­ப­டுத்­தி­வி­டா­தீர்­கள்” என்­றும் அவர் கோரி­னார். அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான நேற்­றைய விவா­தத்­தில் உரை­யாற்­றிய அவர் […]

பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இனி­மேல் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது

நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்­கைக்­கான தென்­னா­பி­ரிக்­கத் தூது­வர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் […]

வடக்கில் நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.!

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் […]