Other News

இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்

இலங்கையில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு பூராகவும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்… இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. அதற்கமைய உந்துருளி ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், சிற்றூர்ந்துகளுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுமிகளை, இலங்கையர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா கான்பரா நகரில் வசிக்கும் சுனில் பட்டகொட என்ற 62 வயதுடைய நபரே, 14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். தற்போது குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கான்பரா நகரில் வசிக்கும் 62 வயதுடைய சுனில் பட்டகொட என்ற […]

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணம் மோசடி! யாழில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். எனினும் பணம் கொடுக்கப்பட்டு […]

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி

வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் பாஜக அரசுக்கு ராகுல் எச்சரிக்கை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காஸ் விலை உயர்ந்து விட்டது. ரேஷன் பொருள் விலை உயர்ந்து விட்டது. உங்களின் பொய் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள். அல்லது இடத்தை காலி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் குஜாராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது விட்டது. வேலையின்மை, குறித்து பாஜக அரசு மீது தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும் ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும் போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் […]

இன்றைய ராசிபலன் I 05.11.17

மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமை கூடும். தள்ளிப் போன விஷயங் கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். […]

ஆரவ்வை நேரில் வாழ்த்திய ஓவியா

பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.அதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார். அதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். அதனால் […]

ஆஸ்பத்திரியில் அட்மிட்டான குஷ்பூ..! ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. இது முடிந்து அவர் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் அவர் […]