Other News

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி

வெற்று பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் பாஜக அரசுக்கு ராகுல் எச்சரிக்கை

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காஸ் விலை உயர்ந்து விட்டது. ரேஷன் பொருள் விலை உயர்ந்து விட்டது. உங்களின் பொய் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள். விலைவாசியை கட்டுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அளியுங்கள். அல்லது இடத்தை காலி செய்யுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் குஜாராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது விட்டது. வேலையின்மை, குறித்து பாஜக அரசு மீது தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும் ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும் போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் […]

இன்றைய ராசிபலன் I 05.11.17

மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமை கூடும். தள்ளிப் போன விஷயங் கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். […]

ஆரவ்வை நேரில் வாழ்த்திய ஓவியா

பிக்பாஸ் வெற்றியாளரான ஆரவ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.அதில் கலந்து கொள்ளும்படி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஓவியாவையும் அழைத்து இருந்தார். அதை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கணேஷ் வெங்கட்ராம், ஹரீஷ், காயத்ரி ரகுராம், ரைஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனால் ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் ஓவியாவும் திடீரென்று வருகை தந்தார். அதனால் […]

ஆஸ்பத்திரியில் அட்மிட்டான குஷ்பூ..! ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. இது முடிந்து அவர் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் அவர் […]

மகிந்த

பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த

பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ​தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வலியுறுத்தியுள்ளார்.  

வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் […]

யாரும் வரலாம் எவரும் போகலாம்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில் […]