Other News

தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை!!

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யப்படுகிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் சமைத்து விற்பனை செய்கிறார்கள். அரசால் அங்கீகாரிக்கப்பட்ட எடிபிள் பிரதர்ஸ் என ஹோட்டலில்தான் மனித கறி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. இங்கு விற்கப்படும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 80,000 ரூபாய் […]

தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது

மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் […]

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் […]

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள  எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் […]

கசிப்புடன் மூவர் கைது

வடமராட்சிப் பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து மூவர் கசிப்புடன் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். துன்னாலையில் வைத்து 38,48 வயதுடைய இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களின் உடமையிலிருந்து ஒன்றரை லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதே வேளை நெல்லியடி நகர்ப்பகுதியில் வைத்து 600 மில்லிலீற்றர் கசிப்புடன் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் […]

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதம் – தேசிய சமாதானப் பேரவை குற்றச்சாட்டு!

கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதால் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதித்து வருகின்றது என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வாக்குறுதியளித்தபடி முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயற்பாடுகள் தாமதம் அடைந்தாலும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பாக, புரிந்து கொண்டுள்ள […]

கருணா

சுயேட்சையாக களமிறங்குகிறார் கருணா!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்த பெரும் கட்சிகளுடனும் இணையாது சுயேட்சையாக போட்டியிடப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கருணா அணி போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் […]

இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து ஆராய ஐ.நா. குழு இன்று இலங்கை வருகிறது

இலங்கையில் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கென ஐக்கியநாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் குழு ஒன்று இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றது. குறித்த குழு, வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தமது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரியுடன் இணைந்து போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான […]

தனியார் மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு வயோபதிபர் ஒருவர் சுகயீனம் காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ஏற்றப்பட்ட ஊசியால் சுகயீனம் கடுமையாகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த, 64 வயதுடைய ஏனாம்பரம் சிவலிங்கம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையை அவரது மனைவி கடந்த 30 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் […]