இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப் பட்ட பகுதியான வலி. வடக்கு வயாவிளான் பகுதிக்குச் செல்லும் மக்கள் வெடிபொருள்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அங்கு ஆங்காங்கே எச்சரிக்கைப் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த வயாவிளான் பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. அங்கு ‘மிதிவெடி, வெடிபொருள்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் எச்சரிக்கைப் பதாகைகள் பல தொங்க விடப்பட்டுள்ளன. […]
Other News
பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய […]
குமரன் பத்மநாதன் குற்றமற்றவர்
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீது […]
கைத்தொழில் மீளமைக்கத்திட்டம்
வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் அபிப்பிராயம் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக கொழும்பு அரசு, மாகாண சபையிடம் அபிப்பிராயம் வினவியுள்ளதால் அது தொடர்பான அபிப்பிராயத்தை மாகாண சபையினரிடம் கேட்கும் வகையில் […]
விஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேருடன் இன்று மதியம் 2 […]
தமிழ்குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா.
ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போரின் போது கிழக்கு மாகாணத்தில் […]
கிளிநொச்சி துயிலும் இல்லம் பூங்கா ஆனது!
அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது. குறித்த பெயர் பலகையை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது! இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது […]
இன்றைய ராசிபலன் 05.12.2017
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக்கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். […]
விதை வெங்காயவிலையேற்றம்
விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்தும் தட்டுப்பாடு குறித்தும் குழப்பமடைய வேண்டியதில்லை. உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளையில் நடுகை செய்யலாம். உற்பத்திச் செலவு குறைவு. இந்த முறையில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்கள பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவ துடன் 50 […]
போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!
போதைப் பொருளுக்கு எதிராக, சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”போதைப் பொருள்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் தடுப்புப்பிரிவினர் இணைந்து போதைப் பொருளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸாரால், நாவற்குழி பகுதியில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றுக்கு இன்று காலை முதல் விழிப்புணர்வுச் […]





