Other News

கடலுக்குச் செல்வது ஆபத்து!!

தெற்கு அந்­த­மான் தீவுப் பகு­தி­யில் – இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரத்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் காற்­ற­ழுத்­தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலை­கொண்­டிருந்­தது. இது எதிர்­வ­ரும் மூன்று தினங்­க­ளுக்­குள் வங்­காள விரி­குடா வழி­யாக இந்­தி­யா­வின் தெற்கு ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்­கிச் செல்­லும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாட்­டில் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் காற்­றின் வேகம், மணித்­தி­யா­லத்­துக்கு 50 தொடக்­கம் 60 கிலோ மீற்­றர் வரை காணப்­ப­டும். கடல் பகு­தி­யில் […]

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் எல்லை நிர்­ண­யம் மற்­றும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது. கடந்த நவம்­பர் மாதம் 2ஆம் திகதி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வால் வெளி­யிட்­டப்­பட்ட அர­சி­தழை இல்­லாது செய்ய வேண்­டும் என்று கோரியே இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அம்­ப­க­முவ பிர­தேச சபை முன்­னாள் உறுப்­பி­னர் விதா­ன­க­மகே நந்­த­ராஜா மனு­வைத் தாக்­கல் […]

மைத்திரி மஹிந்த

மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு அணி­யும், மகிந்த ராஜ­பக்ச ஆத­ரவு அணி­யும் இன்னு­மொரு தடவை பேச்சு நடத்­த­வுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. இரு அணி­க­ளும் முன்­னர் நடத்­திய பேச்சு தோல்­வி­யில் முடிந்­தது. சில பௌத்த பிக்­கு­கள் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக இரு அணி­க­ளும் இன்று சந்­தித்­துப் பேச­வுள்­ளன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­தச் சந்­திப்பு வெற்­றி­ய­ளிக்­கும் சாத்­தி­யக் கூறு­கள் மிகக் குறைவு என்று கட்­சித் தக­வல்­கள் தெரி­வித்­தன.

பிற­ருக்கு உதவ வேண்­டு­மென்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இல்லை

‘‘உதவி செய்ய வேண்­டும் என்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இருப்­ப­தில்லை. வசதி இருப்­ப­வர்­கள் உதவி செய்­வ­தில்லை. இவ்­வா­றான சமூ­கத்­தி­லேயே நாம் வாழ்ந்­து­ கொண்டு இருக்­கி­றோம்.’’ இவ்­வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார். பன்­னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்­பு­ணர்வு தின நிகழ்வு யாழ்ப்­பாண நகர விடு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: யாழ்ப்­பாண […]

இரண்டு எம்பிக்கள் தகுதிநீக்கம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்கள் இருவரது ராஜ்யசபா எம்பி பதவியை நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய […]

யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். […]

இறுதி முடிவு எடுக்க இன்று கூடு­கி­றது கூட்­ட­மைப்பு.!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று கூட­வுள்­ளது. குறித்த கூட்­ட­மா­னது யாழ்ப்­பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் நேற்று முன்­தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் […]

”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”

சீரற்ற கால­நிலை கார­ண­மாக இவ் வருடம் இடம்­பெ­ற­வுள்ள க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சை யில் எந்த வித மாற்­றங்­களும் இடம்­பெ­றாது என பதில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரி­வித்­துள்ளார். க.பொ.த.சாதா­ரண தர பரீட் சையை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நி­லையால் இவற்­றிற்கு எவ்­வித தடையும் ஏற்­ப­ட­வில்லை. எனவே க.பொ.த சாதா­ரண தர பரீட்சை குறிப்­பிட்ட காலத்தில் நடை­பெறும் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். மேலும், அவர் […]

ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். […]