கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Other News
மயில்வாகனபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன
மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் அனுமதியின்றித் தறிக்கப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகன புரம் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவதினம் அங்கு சென்ற பொலிஸார் தறிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றினர். சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை நீதிமன்றில் பாரப்படுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது […]
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்தார் ஹரி ஆனந்த சங்கரி
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் உ.ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் காணாமல்போனோர்கள் நடத்திவரும் போராட்ட கொட்டகைக்கு நேற்றுக் காலை சென்ற அவர் அங்கு காணமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ‘முந்நூறு நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற் போனவர்களின் விடயத்தில் இங்குள்ள அரசியல்தலைவர்களையோ அரச […]
யாழ்ப்பாணத்தை மீட்டது நான் தான்!
கிளிநொச்சியையும், முல்லைத்தீவையுமே மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டது. யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். ஈவெயாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போரை வென்றதாகக் கூறுகின்றார்கள். போரின் மூன்றில் இரண்டு பங்கை யார் முடித்தது. யார் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியது? எனது அரசு ஆட்சியை பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து […]
எடப்பாடியை விளாசிய தினகரன்
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய […]
எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சட்டம் தளர்வடைந்ததால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற […]
தற்கொலைக்கு அனுமதி வேண்டும்
மும்பையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். தெற்கு மும்பையில் வசித்து வரும் நாரயணன் லவாடே(88) மற்றும் அவரது மனைவி ஐராவதி(78) தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ […]
அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]
செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்
அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் […]
கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்தளை பகுதி நோக்கி வாகனங்கள் வெளியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்தேச புதிய களனி பால நிர்மாணப் பணிகளுக்காக இந்த இரு வெளியேறும் பாதைகளும் இவ்வாறு மூடப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டது. அதன்படி இன்று முதல், கட்டுநாயக்க அதிவேக பாதை ஊடாக களனி, பேலியகொடை பகுதிகளுக்குள் வருவதற்கு பேலியகொடை வெளியேறும் […]





