தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.
Other News
மகிந்தவின் எச்சரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி பெரு வெற்றிபெற்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாம் இணையமாட்டோம். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச […]
இன்றைய ராசிபலன் 16.01.2018
மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் […]
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் […]
அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது
ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் இதழின் பத்திரிக்கை ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் […]
ஓசூர் அருகே கோர விபத்து
ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பேருந்தின் மீது மோதியதில் மாணவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து ஓசூருக்கு ஹோண்டா சிட்டி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். நேற்று மாலை ஓசூரை அடுத்த சூளகிரி அருகே கார் வந்தபோது காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை […]
பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்
பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (64) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு இன்று அதிகாலை திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே […]
இன்றைய ராசிபலன் 15.01.2018
மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை […]
நாடுகடந்த அரசு உறுப்பினர் நாட்டுக்குள் நுழையத் தடை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரேஸ்நாத் இரத்தினபாலன் (வயது –-48) தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக கடந்த வியாழக் கிழமை மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார். குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை […]





