Other News

தலித் சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் 11 வயது தலில்த் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்த பின்னர் இரண்டு பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 11 வயது தலித் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். சிறுமியின் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இறுதியில் அந்த சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கால்வாய் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கால்வாயிலிருந்து உடல் […]

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன்

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பலம்பொருந்திய அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் புதிய கட்சி குறித்த ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் […]

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குளிர்காலம் இருந்து வரும் நிலையில் சைபீரியாவில் உலகிலேயே அதிக குளிர் உள்ள நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத வகையில் மைனஸ் 63 டிகிரி வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதிகபட்ச குளிர் இருக்கும் என்று கூறப்படும் அண்டார்டிகாவை விட சைபீரியாவில் அதிக குளிர் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக சைபீரியாவில் […]

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்

மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலையாள ஆக்‌ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் […]

காதல் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பல காதல் ஜோடிகள் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி மாற்று காதல் திருமணம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் சம்பத்தப்பட்ட காதல் ஜோடியினர் பெற்றோர்கள், உறவினர்களால் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பொது இடங்களில் காதல் ஜோடிகளைக் கண்டாலே, […]

ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு இன்று கருணாநிதி சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த கனிமொழி, ‘ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று தான் எங்களுக்கு […]

எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இவர் எப்போது எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும், தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என தோன்றுகிறது. ரஜினியின் அரசியல் குறித்து இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் செயல்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி பாஜகவும், ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என கூறினார். […]

தமிழர்களால் பெருமை படுகிறோம்

தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் வணக்கம் கூறி […]

ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் […]

நாளை வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு

ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாகவும், நாளை முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனாலும் தினகரன் தனன்னுடைய […]