தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமா

மதுரை வண்டியூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- அ.தி.மு.க.வில் இரு அணிகளும் கருத்து வேறுபாடுகளை அகற்றி இணைந்து விட்டது. இதனால் சீரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனை சீர்குலைக்கும் நோக்கத்தில் தி.மு.க.வினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள். மக்களிடம் பொய்களை பரப்பி வருகிறார்கள். மேலும் பாரதிய […]

ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்

திண்டுக்கல்: மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி. தினகரன் குடகில் பதிலளித்து பேசும் போது, அமைச்சர் சீனிவாசன் பதவி […]

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.6ல் நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவு

நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் வெற்றி பெற்றார்கள். இதன் பின் நடிகர் சங்க கட்டிடம் உருவாக்குவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தனியார் டிவி நிறுவனம் ஒளிபரப்பியது. […]

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் – தினகரன்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று குடகு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- *நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் […]

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 74 நாட்கள் இருந்தார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல் என்றனர். […]

தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை சிறிய விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 270க்கும் மேற்ப்பட்ட பெரிய விசைப்படகுகள் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வழங்க கோரி பல வருடங்களாக போராடி வந்த நிலையில் இவர்கள் தடையை மீறி கடந்த 18ம் தேதி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் […]

தனிக்கட்சி தொடங்குவதாக கமல் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார். 100 நாளில் தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் […]

பிரதமர் மோடியின் திட்டத்திற்கு முழு ஆதரவு: ரஜினிகாந்த் அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடிக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். ‘போருக்கு தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி […]

கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய […]