தமிழ்நாடு செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் : எங்கே நடந்தது தவறு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் பலமான ஒற்றைத் தலைமை இல்லை. எடப்பாடி – ஓபிஎஸ்- தினகரன் என மூன்று தலைமைகளாக அதிமுக பிரிந்தது. அதன்பின் எடப்பாடி – ஓபிஎஸ் அணி ஒன்றாக சேர்ந்தது. ஆனால், தினகரன் தனி அணியாக பிரிந்தார். இந்த நிலையில்தான் ஆர்.கே.நகர் […]

தினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்?

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து கூறியதாகவும், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அதிர்ச்சியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், […]

தினகரன் சுயேட்சை அல்ல சுயம்பு

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி […]

எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, […]

தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக கூடாரமே ஆடிப்போய் இருக்கிறது. இந்நிலையில் கோவையில் தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிசாமி தலைமையிலான மனுசூதனன் தோல்வி அடைந்தார். அதிமுக அணியில் இருக்கும் சிலர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து […]

அரசியலுக்கு வருவது பற்றி அப்புறம் சொல்றேன்

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31ம் தேதி அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் […]

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயகாந்த்

சென்னை சைதாப்பேட்டை தேவாயலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கிறிதுமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிராத்தனை செய்தார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விஜயகாந்த், இன்று கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை தேவாயலத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் தேவாலய வளாகத்தில் […]

முதல்வருக்கு பாராட்டுகள்

தினகரன் ஒரு மாயமான் – ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் ஒரு மாயமான் என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவு மாவட்ட […]

தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தற்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட […]

கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை டாக்டர் கைது

சென்னை கிண்டியை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 42). பல் டாக்டரான இவர், ஒரு நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மனைவியை விவாகரத்து செய்தவர். இருப்பினும் முன்னாள் மனைவியுடன் அவர் நட்புணர்வுடன் பேசி வந்ததாக தெரிகிறது. செந்தில்ராஜின் முன்னாள் மனைவி சென்னை கிண்டியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சஞ்சீவ்ராஜ் (33) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதில் சஞ்சீவ்ராஜிக்கும், செந்தில்ராஜின் […]