தமிழ்நாடு செய்திகள்

தினகரனிடம் பேசாமல் திருப்பி அனுப்பிய சசிகலா!

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று நாளை பதவியேற்க உள்ள டிடிவி தினகரன் இன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆசி பெற சென்றார். பெங்களூர் சிறைக்கு சென்ற டிடிவி தினகரனிடம் சசிகலா ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். தினகரன் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு அவரிடம் பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதற்கு காரணம் சசிகலா ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இருந்து மௌன விரதம் இருந்து வருவதாக டிடிவி தினகரன் […]

சசிகலா மௌன விரதம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து ஆசி பெற பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார். ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார். இந்த சந்திப்பின் போது சசிகலா மௌன விரதம் இருந்ததாக தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இருந்து சசிகலா சிறையில் […]

சசிகலாவை சந்திக்காமல் பீலா விட்டாரா தினகரன்?

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது சித்தி சசிகலாவை பெங்களூர் சிறைக்கு சென்று இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார் அவர். தினகரன் தனது பேட்டியில் சசிகலா தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு பின்னர் மௌன விரதம் இருந்து வரும் அவர், நான் கூறியதை மட்டும் கேட்டுவிட்டு சரி என தலையை ஆட்டியதாக கூறினார். ஆனால் சசிகலாவை […]

திமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் படுதோல்வியடைந்து டெப்பாசிட் தொகையை இழந்தது. திமுகவின் இந்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காதது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் திமுகவால் டெப்பாசிட்டை கூட தக்கவைக்க முடியவில்லை. இந்நிலையில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்ததால் அது மக்கள் நல கூட்டணியை போல தோல்வி […]

ரஜினியின் அதிரடி முடிவு?

டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து […]

சசிகலாவை சந்திக்க எம்எல்ஏவாக செல்லும் தினகரன்!

ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது. இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை […]

மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது – மீண்டும் மு.க. அழகிரி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற […]

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான்

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற […]

அதிமுக கூட்டத்தில் பங்கேற்காத 5 அமைச்சர்கள்

அதிமுக நடத்திய கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காத விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், […]