மேஷம்: இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம்: இன்று தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். […]
முக்கிய செய்திகள்
Head News
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்!
தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்களிப்பு- 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இங்கு, இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர்ந்த ஏனைய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. […]
முல்லைத்தீவில் பெரும் சோகம்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் அதிக வெப்பமான வானிலை காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 51 வயதானவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆடுகளை மேய்க்கும் அவர், ஓய்வுக்காக கூடாரம் ஒன்றில் உறங்கிய வேளையில் அவர் மரணித்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழில் வைத்தியசாலையில் பொலிஸார் அட்டகாசம்!!
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது. சுன்னாகம் பகுதிநோக்கி உந்துருளியில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திச் சென்றதோடு வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளினர். இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சமயம் இருவரும் போதையின் […]
பாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்!
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் […]
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்தை வெளியிட்டார் மஹிந்த
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பெல்லன்வில ராஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது மின்சாரம், நீர், அதிக […]
இன்றைய ராசிபலன் 18.04.2019
மேஷம்: இன்று மனோதைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம்: இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு […]
கோத்தாவிற்கு எதிரான வழக்கு விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பில் விசாரிக்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு […]
வளர்ச்சியை தடுக்கவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு..!
“எங்கள் வளர்ச்சியை தடுக்கவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட, எங்கள் சின்னத்தை தெளிவாக பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்” என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால், நாம் தமிழர் கட்சியின் […]
கருணாவுடன் புகுந்து விளையாடியவரின் இரகசியங்கள் கசிந்தது
தேசிய தலைவருக்கு எதிராக கருணாவுடன் இணைந்து செயல்பட்ட பிரபலம் என்று எழுதப்பட்ட கட்டுரை குறித்து சில உண்மைகளை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த கட்டுரையில் 2004,ம் ஆண்டு விடுதலைப்புலிகளை பற்றி கருணாவுக்கு ஆதரவாக நான் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் அதில் மாற்றமில்லை உண்மை… கருணா என்னை 2004,ம் ஆண்டு வேட்பாளராக நியமித்ததாக குறிப்பிட்டுள்ளது 2004,ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவு தேர்தல் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் […]





