முக்கிய செய்திகள்

Head News

கோத்தபாய ராஜபக்

கோட்டாவின் பதிலுக்கு காத்திருக்கும் மகிந்த அணி

எமது கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷவின் பதிலையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் தீர்மானத்தை எடுப்போம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அதன்பின்னரே எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த புதன்கிழமை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து […]

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் . முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை […]

வவுனியாவில் குவிக்கப்பட்ட விசேட அதிரடி படையினர்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அழிவுக்கு விடுதவைப் புலிகளின் தலைவர் காரணம் அல்ல

தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதவைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.04.2019

மேஷம்: இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்: இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். அதிர்ஷ்ட […]

பலாலி

பலாலி விமான நிலையத்திற்கு திடீர் முட்டுக்கட்டை

பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து மீள இயங்க வைக்கும் தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரியொருவர் இது குறித்த தகவல்களை தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். விமானநிலைய புனரமைப்பு திட்டத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையால், இந்த திட்டத்தை முன்னெடுக்கவிருந்த இந்தியாவும் அதிருப்தியில் உள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது. பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக, சர்வதேச தரத்தில் […]

பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள்

அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் […]

கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள சமரவீர

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்பொதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அமைச்சர் மங்கள சமரவீர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் […]

சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி

சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு உதவ தொடர்ந்தும் உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்டார். சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் இந்தச் […]

Maithripala Sirisena

பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ”தேசிய அரசாங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எந்தவொரு சூழ்நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர்களாக சிறிலங்கா அதிபர் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கமாட்டார். அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உள்நாட்டு விவகார […]