வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையின் அதனை மீட்பதற்குரிய நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் விடுதலைப் புலிகள் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் […]
முக்கிய செய்திகள்
Head News
மஹிந்தவை திட்டிக் கொண்டிருந்தால் எல்லா பிரச்சனையும் தீராது!
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. முதலில் இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று (12) மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ஷ கலந்து […]
இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொழும்பு குண்டுத்தாக்குதலின் எதிரொலி!!
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர் என்ற காரணங்களை கூறி சிங்கள மக்கள் கின்னியம மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலை தகர்த்தனர். மேலும்… குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியாவும் சிங்கள மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல்களும் எரியூட்டப்பட்டது. மேலும் வன்முறை தொடராதிருக்க இலங்கை அரசாங்கம் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் எந்த பள்ளிவாசல் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக அங்கிருக்கும் நபர்கள் கூறுகின்றனர். […]
தீவிரவாதி சஹ்ரானை வளர்த்தது ஹிஸ்புல்லா!
காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரான் இருந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அறிவுறுத்தலுக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சஹ்ரான் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவை கட்டியெழுப்பியிருந்தார் என மட்டு. விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழ்பெண்களை கடத்தி சென்று தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றுகிறார்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவசரகால சட்டத்தினாலும் வதைத்தால் தான் வீதிக்கிறங்கி போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக புத்திஜீவிகள், இந்துகுருமார்கள், சிவில் […]
பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு!
குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில […]
இன்றைய ராசிபலன் 13.05.2019
மேஷம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல்ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது […]
இலங்கைக்குள் கொள்கலன்கள் கணக்கில் வாள்கள்!!
நாட்டின் சட்டத்திற்கு அமைய, கொள்கலன்கள் கணக்கில் வாள்கள், இறக்குமதி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வாள்களைக் கொண்டுவந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு பிரச்சினை ஏற்படும் என அறிந்துகொண்டு, அவற்றை பள்ளிவாசலில் வைத்துள்ளார். எனவே, அந்த 47 வாள்களைத் தவிர வேறு எங்கும் வாள்கள் கைப்பற்றப்படவில்லை என அஸாத் […]
வவுனியா பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி
வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது. மின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அடுத்தவர் வாழைச்சேனையில் கைது
தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் செம்மண்ணோடையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை வீதி செம்மண்ணோடையில் வசித்து வரும் 21 வயதுடைய நபரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரின் பணிப்புரைக்கமைய வாழைச்சேனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு […]
சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் அதிர்ச்சி தரும் தகவல்கள்!
கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இந்நிலையில் இந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா ( 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார். ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் […]





