இலங்கை செய்திகள்

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்க முடியும். இதனால் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு இதுவே தீர்வாகும் என கூறி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில […]

சபாநாயகர் மீது கடும் ஆவேசத்தில் விமல்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதையடுத்து […]

மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் சபாநாயகர்?

அரசாங்கத்தினையோ, அமைச்சரவையினையோ சபாநாயகரால் ஏற்றுக்கொள்ள முடியாது எனின், எம்மாலும் அவரை சபாநாயகராக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படபோது வாய்மூலமாக வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார். எனினும் அன்றைய தினத்திற்குரிய ஹன்சார்ட் அறிக்கையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெறாத ஒருவிடயம் […]

இராஜதந்திரிகளை சந்திக்கும் மகிந்த

மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கதைப்பது கவனம் ரணில் முக்கிய உத்தரவு…

நீதிமன்ற விசாரணைகள் குறித்த போதிய அறிவின்றி அவை தொடர்பாக கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து […]

தமிழனை அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது

தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யுத்தத்தின் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக மாறி வந்த அரசாங்கங்கள் […]

வெகு விரைவில் தென்னிலங்கையை பதற வைக்க உள்ள செய்தி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்த முக்கியத் தகவல்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகளின்போது முக்கிய சில தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அவை வெகு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளையடுத்து […]

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த மற்றும் அவரது விசுவாசிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட […]

சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இதன் போது விளக்கம் […]

Ranil

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில், ரணிலுக்கும் நாடாளுமன்றம் […]