நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற […]
இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் மரணம்!
மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுணதீவு வீதித்தடையில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா […]
மஹிந்த – ரணில் இன்று திடீர் சந்திப்பு?
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்குதிடையிலான சந்திப்பானது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
மஹிந்தவுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்பதவிகளை வகிப்பதற்கு அதிகாரமில்லையென ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை ஆகியவற்றுக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக […]
பதறுகிறார் விக்னேஸ்வரன்
தன்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீளவும் வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நேற்று ஜனாபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவரது கோரிக்கையை தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு […]
ஜனாதிபதியுடன் எவ்வித முரண்பாடும் இல்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், ஆளுந்தரப்பு சார்பில் கலந்துகொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு கோரினார். அதற்கு பதிலளித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென குறிப்பிட்ட சபாநாயகர், […]
மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனினும், அதற்கு தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனற்று போனதாக குறிப்பிட்ட அநுரகுமார, இனியும் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லையென குறிப்பிட்டார். […]
கூட்டமைப்பின் இறுதி முடிவு!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு இருப்பவர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒருவராக இருக்கின்றார். அத்துடன் இவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, […]
மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக மற்றுமொரு மனு
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடுமாறுக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவினை தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் […]
மைத்திரியின் இந்த நிலைக்கு ரணில் செய்த காரியம் அம்பலமானது
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்கமுடியாதென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை ரணில் மறுதலித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களாலேயே ரணிலை விட்டு அவர் பிரிந்ததாக தயாசிறி ஜெயெசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டின்போதே அவர் மேற்படி கூறினார். ”19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென […]





