பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின் செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளதாக […]
இலங்கை செய்திகள்
அம்பலமானது ஆதாரம்! பெரும் சிக்கலில் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத அரசியல் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க […]
சம்பந்தனின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் மகிந்த அணி
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்பதுடன், அரசியலமைப்பிற்கு முரணானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எதிர்க்கட்சி தலைவர்களாக இருவர் உள்ளனர். இதனால் சபாநாயகர் எடுத்த முடிவு குறித்து கேள்வி எழுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் […]
சர்வதேச சக்திகளுடன் ரணில் பதவியேற்பு
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது. அந்த முறைமை நாட்டிற்கு இன்றியமையாதது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கி, சர்வதேச சக்திகளின் அனுசரணையுடனேயே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றிருக்கின்றார். இதனை மக்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் குறித்த மக்கள் அபிப்பிராயத்தை மீள் […]
இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களா?
சபாநாயகர் இன்னும் தன்னை பதவியில் இருந்து நீக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவர் வகித்து வருவதாக கருத வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ […]
மஹிந்தவிற்கு சற்றுமுன் கிடைத்த பெரு மகிழ்சியான செய்தி
மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் தமது கட்சியின் உறுப்பினர்தான் என சிறிலங்கா சுதந்திரக்கட்சி சற்றுமுன்னர் அதிரடியாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான உறுதிப்படுத்தற் கடிதத்தை சற்றுமுன்னர் சபா நாயகரிடம் சுதந்திரக்கட்சி கையளித்துள்ளது. சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியாவதாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சபா நாயகர் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து […]
சம்பந்தன் பதவி அந்தரத்தில்? அடுத்தது யார்?
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்றைய தினம் பொதுமக்கள் பார்வையாளர் கலரி மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கலரி என்பவற்றைத் திறப்பதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாதக் காரணத்தினால் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைய, ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் […]
சூடு பிடிக்க போகும் கொழும்பு அரசியல்; களத்தில் புதிய திருப்பம்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் காணப்படும் எதிர் கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமானதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த!
இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நேற்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சதித்திட்டத்தின் மூலம் மஹிந்தவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய […]
சம்பந்தனின் பதவி பறிபோனது! குதூகலத்தில் மஹிந்த
நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. அதேநேரம் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இத்துடன் நாடாளமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தராஜ பக்சவும், எதிர்க்கட்சி அமைப்பாளராக மஹிந்த அரவீரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மஹிந்த தரப்பினர் சுதந்திரக்கட்சியிலிருந்து நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் […]





