முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பாக ஜனாதிபதியால் இதற்கு முன்னர் முன்வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உள்ளடக்கி அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலும் மற்ற வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி […]
பாடசாலை சீருடை வவுச்சர் இவ்வாரம்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை இவ்வாரம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஏற்கனவே வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 2445 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆரையம்பதியில் கோர விபத்து : மூன்று உயிர்கள் ஸ்தலத்தில் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் பலியாகியுள்ளன. ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இக்கோகோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தும் அதிகாரிகளினதும் கால்நடைகளின் […]
வடக்கில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைக்க நிதி
வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் நேற்று மாலை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை மதிப்பீட்டுக்கு அமைவாக 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைக்க 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. […]
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சாரத்திகளின் விலாசத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 4 29, 493 பாடசாலை பரீட்சாரத்திகளும், 259,080 தனியார் பரீட்சாத்திகளும் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் […]
மீனவர்களின் வலையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்!
மட்டகளப்பில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் இது உண்மையில் பாம்பா? அல்லது ஒரு வகை மீன் இனமா? என பல கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளது. உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி எனப்படும் பாம்பு இனம் என்பதே இதன் பெயராக உள்ளது. இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர். ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்கும் […]
வீடுகள் தாழிறக்கம், வெடிப்புகளால் மக்கள் இடப்பெயர்வு
வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாமிமலை – ஓல்டன் பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியில் தாழிறக்கம் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன், குடியிருப்பு பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் வெளியேறுவதனால் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 25 குடும்பங்களை […]
தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக […]
தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே […]





