2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார். ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு […]
இலங்கை செய்திகள்
தகவல் அறியும் உரிமை எங்கே? நாமல் கேள்வி
அரசின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசு, சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார். சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் எந்த அரசும் செய்யாத வகையில் தற்போதைய அரசு சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக […]
ஒரு சிலரின் செயல்களால் முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது
ஒரு சிலரின் அழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுஇ நடைபெற்ற சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு […]
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்நிலை உருவாகியுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம், ஒழுங்கு அமைச்சை எவரிடம் கையளிப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது.அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் பங்கேற்றனர். சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “”சட்டம், ஒழுங்கு […]
பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!
அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு இவ்வாரம் நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர். அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் […]
சமூக வலைத்தளங்களின் முடக்கம்; இலங்கை பொருளாதாரத்திற்கு அடி
சமூக வலைத்தளங்கள் பாவனைமீது அரசு வித்துள்ள தற்காலிக தடை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கல் செலுத்தியுள்ளதுடன்இ பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இநனவாத வன்முறைகள் காரணமாக இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முதன் கிழமை முதல் அவசரகால நிலையும் நாடு பூராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலை நீக்கப்படும்வரை சமூக வலைத்தளங்கள் […]
மைத்திரி- மோடியை சந்தித்தார்
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இன்று காலை புதுடெல்லியில் ஆரம்பமான குறித்த மாநாட்டில், 45 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டுள்ளார். மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியதோடு, அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சட்டரீதியான நடவடிக்கை மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்போம்
பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கண்டி – திகன பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ள+ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, சட்டரீதியான நடவடிக்கை மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார். திகன உள்ளிட்ட அப்பிரதேசங்களில் தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர்; பிரமுகர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் அமைச்சர் ஈடுபட்டார். கண்டி – மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் இது […]
ஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை
நாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமூகமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக நேற்று (சனிக்கிழமை) கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டகுழுவில் அங்கம் வகித்திருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு இடம்பெற்ற சந்திப்புகளிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது. இவ்வளவு அழிவுகளும், […]
நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடியும் – நாம்நாத் கோவிந்
சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்றது. இதன்போது சூழலைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை இந்திய ஜனாதிபதி பாராட்டினார். இதேவேளை, முழு உலகமும் மின்சக்தி பிரச்சனைக்கும், பூகோள வெப்பமாதல் அதிகரிப்பது […]





