இலங்கை செய்திகள்

தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார். இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா […]

நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.

வடமாகாண சபை

ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக் குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர் வில் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. நிதி மோச­டி­கள், அதி­கார முறை­கே­டு­கள் உள் ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் காலத்­துக்குக் […]

பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!

பால்மா ஒரு கிலோ 75 ரூபா­வாலும், சமையல் எரிவாயு 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டு­ம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்­தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதி­க­ரித்­துள்ள கார­ணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறு­வ­னங்கள் விலையை அதி­க­ரிக்­கும்­படி வாழ்க்கைச் செலவு […]

வடக்கு முதல்வரின் புதிய முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் அவர் […]

தற்­கா­லிக வீடு­கள் கூட இல்­லாத கோயில்­காடு மக்­கள்!!

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக தற்­கா­லிக வீடு­கள் கூட இன்றி மிக­வும் மோச­மான நிலை­யில் வாழ்ந்து வரு­வ­தாக இத்­தா­வில் கோயில்­காடு மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­வித்­த­தா­வது: கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் உள்ள கிரா­மமே இத்­தா­வில் கிரா­மம். குறித்த கிரா­மத்­தில் உள்ள ஒரு பகு­தியே கோயில்­காடு பகுதி. குறித்த பகு­தி­யில் பிர­தேச செய­ல­கத்­தால் அரை ஏக்­கர் காணி வழங்­கப்­பட்டு காணி இல்­லாத மக்­கள் […]

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் […]

முல்­லைத்­தீவில் மொழிப் பிரச்­சி­னை­யால் நோயா­ளர் அசௌ­க­ரி­யம்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் கட­மை­யாற்­று­வ­தால், நோயா­ளர்­கள் மொழிப் பிரச்­சி­னையை எதிர்­கொண்டு வரு­கின்­றார்­கள். இதே மாவட்­டத்­தைச் சேர்ந்த தமிழ் மருத்­து­வர்­கள் பலர் இங்கு கட­மை­யாற்ற விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இவ்­வாறு வட­மா­காண சுகா­தார அமைச்­ச­ரி­டம் சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்ட மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னை­யின் அபி­வி­ருத்­திக்­கு­ழுக் கூட்­டம் வட­மா­காண சுகா­தார அமைச்­சர் ஞா.குண­ சீ­லன் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே அமைச்­ச­ருக்கு இந்த […]

ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே […]

யாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு சுடரேற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.