இலங்கை செய்திகள்

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத குடியேறிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்து கொள்ளும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லவிருந்த 131 இலங்கையர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைப்பகுதிக்கு இன்னும் ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவுஸ்திரேலியா தமது எல்லைப்பகுதி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளதையும் குடிவரவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கட்டியெழுப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் பக்கசார்பற்ற சூழல் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஜனாதிபதியின் பணிகளுக்கான அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறித்து […]

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ளுங்­கள்!!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தில் அனைத்து உற­வு­க­ளும், அமைப்­புக்­க­ளும் , அர­சி­யல்­கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து ஓர­ணி­யாக ஒன்­று­பட்டுச் செய­லாற்ற வேண்­டும் என்று ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. அந்­தக் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் உள்­ள­தா­வது-, இலங்கைத் தீவில் தமிழ் மக்­க­ளும் இறை­யாண்மை உள்ள ஆட்சி அதி­கா­ரங்­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­கள். இந்­தச் செல்­நெ­றிப்­போக்கு கடந்த காலங்­க­ளில் இடர்­பா­டு­களை எதிர்­கொண்ட வேளை­க­ளில்­தான் தமி­ழர்­கள் தமது தார்­மீக அடிப்­ப­டை­யி­லான […]

பருத்­தித்­து­றை­யில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு

பருத்­தித்­துறை, கற்­கோ­வ­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்த வாள்­வெட்­டில் 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் கடந்த ஒரு மாதத்­தில் மூன்று வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர் பில் பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வே­யில்லை என்று மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்த நிலை­யி­லேயே நான்­கா­வது சம்­ப­வ­மாக இது நடந்­துள்­ளது. பருத்­தித்­துறை, சுப்­பர்­ம­டம், தும்­பளை ஆகிய இடங்­க­ளில் கடந்த ஏப்­ரல் மாதம் அடுத்­த­டுத்து வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­தன. இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரு­டைய அணு­கு­மு­றை­யில் சந்­தே­கம் […]

வாகன விபத்தில் 25 பேர் காயம்

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று எரிபொருள் ஏற்றிவந்த வாகனத்தின் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

ஆசி­ரியையின் கூந்­தலை அறுத்­துக் கொடுமை கொக்­கு­வி­லில் சம்­ப­வத்தின் பின்னனி

யாழ்ப்­பா­ணம் – கொக்­கு­வில் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றுக் குள் புகுந்த இரு­வர் அங்­கி­ருந்த நடன ஆசி­ரி­யை­யும் அவ­ரது தாயா­ரை­யும் கத்­தி­யால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­விட்­டுத் தப்­பிச் சென்­ற­னர். படு­கா­ய­ம­டைந்த ஆசி­ரி­யை­யும், தாயும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டனர். இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 2.45 மணி­ய­ள­வில் கொக்­கு­வில் மூன்­றாம்­கட்­டை­யில் (தாவ­டிக்கு அண்­மை­யில்) நடந்­துள்­ளது. மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் வீட்­டுக்­குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். ஆசி­ரி­யை­யின் கூத்­தலை வெட்­டிக் அவ­ரைக் கொடூ­ர­மா­கக் கொடு­மைப்­ப­டுத்­தி­னர். […]

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

வீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு!!

விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த நாக­பாம்­புக்கு பால் ஊற்றி வழி­பாடு செய்து அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர் பக்­தர்­கள். இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை வல்லை நாக­தம்­பி­ரான் ஆலய வீதி­யில் நடந்­துள்­ளது. வீதியை நாக­பாம்பு கடக்க முயன்­றது. அப்­போது மோட்­டார் சைக்­கி­ளுக்­குள் சிக்கி அது காய­ம­டைந்­தது. அதைக் கண்­ட­வர்­கள் பாம்மை நாக­தம்­பி­ரான் ஆல­யத்­தில் வைத்து பாலூற்றி அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர். பின்­னர் அந்­தப் பாம்பை வழி­பட்­ட­னர். பாம்பு மயக்­கம் நீங்கி […]

துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!

பளை, அர­சர்­கே­ணி­யில் நிலக்­கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்­றுக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. காணி­யின் உரி­மை­யா­ளர் நேற்­றுக் காணி­யைத் துப்­பு­ரவு செய்­த­போதே நிலக்­கீழ் பதுங்­குழி தென்­பட்­டது. இந்­தப் பதுங்கு குழி தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று நம்­பப்­ப­டு­கின்­றது. பதுங்கு குழி இருப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் அந்­தப் பகு­திக்­குச் சென்று ஆய்­வு­களை மேற்­கொண்­ட­னர். பதுங்கு குழியை அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்த இரா­ணு­வத்­தி­னர், அது­வரை காணி­யில் எந்த […]

முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.