இலங்கை செய்திகள்

34 வருடங்களின் பின் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்

பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகைதருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு 60ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியமர்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொத்துவில் தமிழ் […]

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (64) யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை […]

யாழ்ப்பாண வீதிகளில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமணத் தம்பதி

முந்தைய காலக்கட்டத்தில் திருமணம் என்றால் விழாப்போல் மாறிவிடும் மணமக்களின்வீடு. ஏனென்றால் அப்போதெல்லாம் திருமணம் என்றால் அனைத்து உறவினர்களும் ஒருவாரம் முன்னரே வந்து வீடே களை கட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் குறைந்து மண்டபத்தில் திருமணம் முடித்து அப்போதே உறவினர்கள் கிளம்பி விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற புதுமண ஜோடி ஒன்று அந்த காலத்தில் திருமணம் முடிந்து யாழ்ப்பாணப் பகுதியில் மாட்டுவண்டியில் செல்கின்ற காட்சி பலருக்கும் அதை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்கள் கைகளில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளால் கைவிடப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான இன்பராஜா கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தhர். இன்பராஜா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் கொழும்பில் உள்ள நிதியமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும […]

இலங்கையில் ஆற்றில் மிதந்த 4 வயது சிறுவனின் சடலம்! காரணம் என்ன?

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நான்கு வயது சிறுவன் ஆற்றில் கிடந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபீத் எனும் குறித்த சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சிறுவனை […]

பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியைத் தரவில்லை – ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட போது, தானோ, அல்லது தனது சகோதரியான பிரியங்கா காந்தியோ மகிழ்ச்சியடையவில்லை என்று இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் ஹம்பேர்க் நகரில் Bucerius Summer School இல் நேற்று முன்தினம், நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார். “ வன்முறைகளால் எனது குடும்பத்தில் இரண்டு பேரை இழந்திருக்கிறோம். எனது பாட்டி (இந்திரா காந்தி) […]

நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 6ஆம் நாள் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, எம்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

யாழில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

யாழ்ப்பாணம் மயிலிட்டி மகா வித்தியாலயம் இரு வாரங்களுக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யுத்த காலத்தில் செயலிழந்து காணப்பட்ட மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.திறப்பு விழாவை தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”மயிலிட்டி மகா வித்தியாலயத்தின் நிலை தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா […]

இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்

இரா­ணுவ மூலா­போ­யத்­தின் ஓர் அங்­க­மா­கவே சீனா அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று அமெ­ரிக்க இரா­ணு­வத் தலை­மை­க­மான பென்­ட­கன் அறிக்­கை­யிட்­டுள்­ளது . அமெ­ரிக்க நாடா­ளு­மன்­ற­மான காங்­கி­ர­ஸூக்கு இரா­ணுவ மற்­றும் பாது­காப்பு முன் னேற்­றங்­கள் தொடர்­பாக பென்­­ரகன் சமர்­பித்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்பட்டுள் ளது.அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது கடந்த ஜூலை மாதம் டிஜி­போட்­டி­யில் சீனா தனது இரா­ணு­வத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்­க­ளில் இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை வசப்­ப­டுத்­தி­யுள்­ளது. பீஜிங்­கின் நல­னுக்­காக […]

மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு தீர்வு! விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் […]