Author: குமார்

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி இந்திராபானர்ஜி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதரர்கள் என்று பள்ளி மைதானத்தில் தேசிய கொடியின் கீழ் நின்று உரக்க சொல்லும் போது மெய்சிலிர்க்கத்தான் செய்யும். ஆனால் அந்த சகோதரர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள […]

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேசை ஆதரித்து 42,47வது வட்டம் சந்திப்பு, கொருக்குப்பேட்டை, மன்னப்ப முதலி தெருவில் நேற்று மாலை 7 மணி அளவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 10 பெண்கள் உதவியுடன் இரவு பரபரப்பாக நடந்த பண சப்ளை

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் […]

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் […]

அம்மாவின் சாதனைகளை சொல்லி நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஓட்டுவேட்டை

ஆர்.கே.நகர் தொகுதியில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மறைந்த முதல்வர் அம்மாவின் சாதனை திட்டங்களை எடுத்து கூறிய அவர் அந்த திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல வளர்ச்சி பணிகளும் தொடர வேண்டுமானால் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பெண்கள், […]

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்: ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல்

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என, ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரு மெட்ரோ ரெயிலில் குண்டு வெடித்ததில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். […]

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது: நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு கடும் எச்சரிக்கை

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி […]

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் […]

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார். போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவு ஒவ்வாமையால் […]