Loading…
Author: தமிழவன்
மேஷராசி புத்தாண்டு பலன்கள்-2018
Loading…
ரிஷபராசி புத்தாண்டு பலன்கள்-2018
Loading…
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட இருவர் கைது
இரு சமூகங்களுக்கிடையே இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளதுடன் மேலும் இரு நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நாவலப்பிட்டி நகரில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் முச்சந்தியில் சில நலன்விரும்பிகள் இணைந்து வழிகாட்டி குறியீட்டுடன் கூடிய சுவாமியின் (சமன்தெய்யோ) உருவப்படம் அடங்கிய பதாகையினை செய் திருந்தனர். அப் பதாகையினை சில தினங்களுக்கு முன்னர் விஷமிகள் […]
15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபருக்கு பிணை
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த (21 வயது) இளைஞரான முச்சக்கரவண்டி சாரதியை பிணையில் செல்ல அனுமதித்த கண்டி நீதிமன்ற நீதிவான் விசாரணையை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்தார். தலாத்து ஓயா பொலிஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தலாத்து ஓயா பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிசாரதி 15 வயது சிறுமி ஒருவருடன் நீண்டகாலமாக காதல் கொண்டிருந்துள்ளார். இருவரும் மிக நெருக்கமாக பழகிவந்த […]
பட்ஜட்டை சாதகமாக பார்க்கின்றோம் : கூட்டமைப்பு தெரிவிப்பு
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்காக கூட்டமைப்பிடத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் வரவு–செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அதனை சாதகமாக பார்ப்பதாக ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுபடவேண்டிய நிலைமைகள் உள்ளன. அதனடிப்படையில் எமது தரப்பின் கருத்துக்களையும் வரவு […]
திரு அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்)
மண்ணில் : 7 யூன் 1968 — விண்ணில் : 9 நவம்பர் 2017 அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும், கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான […]
இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாமாக […]
அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் […]
இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் […]





