சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவரது அலுவலகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானத் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீட்டுக்குள் டிடிவி தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று […]
Author: தமிழவன்
உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்தப் படத்தை, நேற்று ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தவர், ‘இந்தப்படை வென்றே தீரும்’ எனப் பாராட்டியுள்ளார். ‘உதய்க்குப் பேர் சொல்லும் படமாக இது இருக்கும்’ என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த டீமும் சந்தோஷத்தில் மிதக்கிறது. […]
இன்றைய ராசிபலன் I 08.11.17
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. […]
என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் கமல்ஹாசன் வேண்டுகோள்
இன்று கமல்ஹாசனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர். ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் […]
தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் […]
கருணாநிதியுடன் மோடி சந்திப்பு; சுப்ரமணியன் சுவாமி கடும் விமர்சனம்
சென்னையில் நேற்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். கருணாநிதி, முரசொலி பவளவிழா மலரை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான […]
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது
காஷ்மீரில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரம் மூண்டது. கலவரத்தில் 90 பேர் பலியானார்கள். இதுபற்றிய விசாரணையின்போது, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்டோர் நிதி திரட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஒரு கும்பல் காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக […]
யாழில் கணவன், மனைவி கைது
யாழ்ப்பாணத்தில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டுவந்த கணவன், மனைவி ஆகியேரை இன்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவவையடுத்து, யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு சுற்றிவளைத்த போதே குறித்த இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய கணவனும், 19 வயதுடைய மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் , போலிநாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் […]
இன்றைய ராசி பலன் I 7-11-2017
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: காலை 11.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். […]
உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன ? இதோ உங்களை பற்றிய ரகசியம்
நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதை போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன் படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரமித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.





