நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்தால் டெங்கு காய்ச்சலுக்காக […]
Author: மலரவன்
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். […]
ஓராண்டுக்குப்பிறகு வெளியே வந்தார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். முரசொலி பவள விழா கண்காட்சி அக்.10 வரை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். ஒரு ஆண்டாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார். கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் முரசொலி அலுவலகம் வந்தார். ஓராண்டுக்குப்பிறகு பொதுவெளியில் […]
டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு காரணமான பள்ளிகளுக்கு அபராதம்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவன் படிக்கும் பள்ளிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் லதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி கட்டிடங்களில் மழை நீர் தேங்கியிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை எச்சரித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல, நாமக்கல்லில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவதற்கு வசதியாக தண்ணீர் தேங்கி கிடந்த இரண்டு […]
நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டாம்: நடிகர் கமல்!
நிலவேம்புக் குடிநீர் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என ரசிகர் மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர் மன்றத்தினர் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இதர […]
கர்ஜனை-க்காக த்ரிஷாவுக்கு கைகொடுத்த கார்த்தி
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்து, சுந்தர் பாலு இயக்கத்தில் த்ரிஷா நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கர்ஜனை’ காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை ஆக்ஷன் திரில்லராக படமாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை ‘பருத்தி வீரன்’ புகழ் […]
அஜித்துடன் ஓவியா
நடிகர் அஜித் நடிக்கும் படத்தில் என்ன வேடமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் என்று நடிகை ஓவியா தனது ரசிகர் மத்தியில் தெரிவித்துள்ளார். ஓவியா தான் இப்போது பல இளைஞர்களின் கனவுக் கன்னி. பிக்-பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டார் அவர் . தற்போது இவர் எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் அமோக வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவரிடம் தல அஜித்துடன் […]
இன்றைய ராசிபலன் 19.10.2017
மேஷம்: சிரம சூழ்நிலையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பேணுவது நல்லது. நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். ரிஷபம்: மனதில் ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். நேர்மை மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். மிதுனம்: கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் […]
நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை – ஜெனிவாவில் சுமந்திரன்.
திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது. இன்று ஸ்விஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ […]
இன்றைய நாளில் “புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம் மீது இலங்கை அரசின் வான்படை தாக்குதலில் சேதமடைந்த நாள் ஆகும்.
தமிழீழ விடுதலை போராட்டம் பல படிநிலைகளை கடந்து வளர்ச்சி பெற்ற ஒரு போராட்டம் ஆகும். தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகள் ஆற்றிய பங்கு வரலாற்றின் மாபெரும் பாய்ச்சலாக திகழ்ந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் கெரில்லா போராளிகளாக பின்பு தேசிய கட்டமைப்புகளாக ஒரு தேசிய இயக்கமாக நிழல் தேசத்தை இயக்கிய பொற்காலம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழர் நிலப்பரப்பில் பெரும்பகுதி மீட்கப்பட்ட காலங்களை கூறலாம். ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக […]





