Author: மலரவன்

விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்

விண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை 3 […]

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் உள்ளிட்ட அணி தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றனர். வரும் மே மாதம் மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் மதுரை […]

வடகொரியாவில் நடப்பது என்ன?

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை […]

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறி நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து […]

தொடர் போராட்டங்களால் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைப்பு

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் […]

புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு […]

பெற்ற மகனை மிருகத்தனமாக அடிக்கும் தந்தை; பதற வைக்கும் வீடியோ காட்சி

தந்தை ஒருவர் தனது மகன் பொய் பேசியதால், அவனை மிருகத்தனமாக அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று மகன் பொய் கூறியதாக ஷில்பா கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை விளையாட்டு பந்து போல் தூக்கி எறிந்தார். […]

நாடு முழுவதும் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் […]

Maithripala Sirisena

கோத்­தா­வின் பாது­காப்பு ரணில்­ தான்!!

முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச கைது செய்­யப்­ப­டா­மைக்கு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ணம் என்று அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. கோத்­த­பாயவைக் கைது­செய்­ய­வேண்­டாம் என்று தாம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­க­வில்லை. இவ்­வாறு தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. ஊட­கங்­க­ளின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பு அரச தலை­வர் அலுவலகத்தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­தா­வது-: கோத்­த­பாய […]

பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் […]