Author: மலரவன்

சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை

சவுதியில் பெண்களுக்கு அதரவாக இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் தொடர்ந்து விலக்கப்பட்டு வருகிறது. சவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா […]

விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம்: 71 பயணிகள் கதி என்ன?

ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று திடீரென நடுவானில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த 71 பயணிகளும் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யாவை சேர்ந்த ”சரடோவ் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்டோனோவ் ஏஎன்-148 என்றா பெயரை கொண்ட இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானம் பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்யாவில் உள்ள ஆர்குனாவோ என்ற கிராமம் […]

தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி […]

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். […]

தைய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலி

தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். […]

மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி

இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி கடும் கோபத்தில் பேசி வருகிறார். இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் […]

பெண்களின் உள்ளாடையை திருடும் புத்த துறவி

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர் காணாமல் போனது. இதனால் இதனை திருவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டது. பதிவான சிசிடிவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த […]

பக்கோடா விற்பது என்ன கேவலமா?

பிரதமர் மோடி பக்கோடா விற்பதை வேலைவாய்ப்பாக குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்!

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில். வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மீண்டும் அனைத்து கட்சி கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி பொது கூட்டத்தில் திமுக ,காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே ஜனவரி 27 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழக அரசு அறிவித்த […]

ஒரே ஊசியில் பலருக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்..

மலிவான கட்டணம் என அறிவித்து ஒரே ஊசியை தொடர்ந்து பலருக்கும் செலுத்தி ஹெச்.ஐ.வி கிருமி தொற்றை ஒரு மருத்துவர் ஏற்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு தொண்டு நிறுவனம் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அப்போது, அந்த கிராமங்களில் வசிக்கும் 21 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் […]