காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 47 நாட்களை எட்டியுள்ள நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாகக் கட்டமைப்புகளை முடக்கிப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் […]
Author: பார்த்தீபன்
மத்திய அரசிடம் அதிகாரம் காணப்படும் தீர்வே வேண்டும்! – ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை
மத்திய அரசின் கரங்களில் அதிகாரம் காணப்படும் அரசியல் தீர்வே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மத்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய மகாநாயக்க தேரர்கள் இருவரும், ஜனாதிபதிக்கு 21 விடயங்களைச் சுட்டிக்காட்டி நீண்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “கண்டி தலதா மாளிகைக்கு […]
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவம் தயார்! – மே 3,4 இல் இறுதி செய்யப்படும்
புதிய அரசமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கையின் நகல் வடிவத்தை அடுத்த ஒரு சில தினங்களில் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அங்கத்தவர்களுக்கு அனுப்புவதற்கு நேற்று நடைபெற்ற வழிகாட்டல் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் மே மாதம் 3, 4 ஆம் திகதிகளில் நடைபெறும் அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் அடுத்த கூட்டத்தில் அந்த இடைக்கால அறிக்கையை இறுதி செய்து, அதனை அரசமைப்பு நிர்ணய சபையாகச் செயற்படும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது எனவும் இந்தக் […]
மஹிந்த அணியை எதிர்க்கட்சியாக ஏற்கமுடியாது! – சபையில் அநுரகுமார சுட்டிக்காட்டு
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த அணி உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த முன்னணியிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எதிரணிப் பக்கம் வந்து அமர்ந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாளையே வழங்குவதற்கு நாம் தயார்.” – இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க. நாடாளுமன்றத்தில் ஐ.நா. தீர்மான விவாதத்துக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சி […]
ஐ.நா. தீர்மான விவாதத்தில் பங்கேற்க ஆவணங்கள் சகிதம் சபைக்கு வந்தார் சம்பந்தன்!
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த ஐ.நா. தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சதிகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவைக்கு வந்திருந்தார். எனினும், விவாதம் நடைபெறாது தடைப்பட்டதால் அவர் மிகுந்த கவலையடைந்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. […]
திட்டமிட்ட அடிப்படையிலேயே ஐ.நா. விவாதத்தைக் குழப்பியடித்தது அரசு! – இராணுவத்தினருக்குப் பெரும் அநீதி என்கிறது மஹிந்த அணி
நாட்டுக்கும், இராணுவத்துக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துள்ள ஐ.நா. தீர்மானம் தொடர்பில், பொது எதிரணி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டது எனவும், இது பொது எதிரணிக்கு மட்டுமன்றி இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி அரசால் இழைக்கப்பட் பெரும் அநீதியாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை […]
கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை
* சர்வதேச பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். * குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். * வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். * பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். * காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காக இலங்கை அரசு பயன்படுத்தக்கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை […]
அரசு பராமுகம்! உறவுகள் கடும் கவலை!! – தொடர்கின்றது நீதி வேண்டி போராட்டம்
காணாமல்போனோரின் உறவுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் தீர்வு எதுவும் இல்லாமல் இன்று வியாழக்கிழமையும் தொடர்கின்றன. தேசிய அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்குக் கடும் வேதனையாக உள்ளது என்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 42 […]
போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ‘போர்க்குற்றங்கள்’ இடம்பெற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்று கருதக்கூடியயளவிலான மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நிகழ்த்தப்பட்டதற்கு நம்பகரமான சாட்சிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ள நிலையில் […]
ஐ.நாவின் அழுத்தம் வந்தாலே பரிந்துரைகள் அமுலாக்கப்படும்! – செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களைக் கொடுத்தால்தான் இலங்கை அரசு பரிந்துரைகளை நிறைவேற்றும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செல்வம் […]





