Author: பார்த்தீபன்

எந்தவொரு மாகாண சபையின் ஆட்சியையும் மஹிந்த அணியால் பிடிக்கவே முடியாது! – சு.க. திட்டவட்டம்

மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான  துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த அணியிடம் சென்றுள்ள நிலையிலயே சு.கவின்  பொதுச் செயலர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறாது. எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க […]

மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!

வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது. பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த அதிரடி முடிவுகளின் பிரதிபலனாக அம்மாகாண சபைகளில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. அத்துடன் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். வட மத்திய, மத்திய மற்றும் […]

ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே ரணிலால் மலையக மக்களுக்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 […]

தொண்டாவும் திகாவும் நாளை ஒரே மேடையில்! சங்கமிக்கவைக்கிறது மோடியின் வருகை!! – ஹட்டனைச்சூழ வரலாறுகாணாத பாதுகாப்பு

மலையக அரசியல் களத்தில் இரு துருவங்களாக வலம்வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும், தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரமும் எதிர்வரும் நாளை வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் அமரவுள்ளனர். இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை ஹட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து மலையக மக்களுக்காக அவர் சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் […]

வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை […]

சர்வ மதங்களையும் காப்பதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரல்! – பௌத்தத்துகுரிய முன்னுரிமை அப்படியே இருக்கும் என்கிறார் மைத்திரி

அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்லும் நோக்கிலேயே சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இலங்கையில் […]

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட் பார்’! – சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை; கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைப்பு யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு […]

தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்கும் எதேச்சதிகாரத்துக்கு எதிராக அரச வைத்தியர் சங்கம் போர்க்கொடி!

இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தன்று தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முறையில் ஒருசில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருப்பதை இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த எதேச்சதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைக்கும் எதிராக தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நளின் டீ ஹேரத் தெரிவித்துள்ளார். “இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் அரசைக் கவிழ்க்கவோ, புதிய […]

ஜனாதிபதி தலைமையில் அடுத்தமுறை கூடுவது புதிய அமைச்சரவையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தபடியாக நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டம் அநேகமாக மீளாய்வு செய்யப்பட்ட அமைச்சரவையாக இருக்கலாம் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன. அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்து முடிந்ததும் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படுவது சம்பிரதாயமாகும். எனினும், இறுதியாக நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படாததால் அடுத்த கூட்டம் அநேகமாக மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவையின் கூட்டமாக இருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது அரசமைப்புத் […]

வெகுவிரைவில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம்! – மஹிந்த தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்கிறார் நாமல்

“மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]