பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் […]
Author: அருள்
இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச் […]
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நேற்றிரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப் பகுதிக்கும் அது பரவியுள்ளது. நவாலி வடக்கு, சங்கரத்தை பிரதான வீதியில் கேணியடிப் பகுதியிலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் சரமாரியாக கற்கள் வீசப்பட்டுள்ளது. வீட்டின் சீற் உடைந் துள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வன்னியசேகரம் இது […]
இன்றைய ராசிபலன் 12.08.2018
மேஷம்: இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம்: இன்று […]
யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக வாள்வெட்டு, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையிலேயே, பொது மக்களின் நலன் கருதி […]
அடச்சே என்னங்கடி பண்றீங்க…? மிட் மிட் மிட் நைட் மசாலா..!
பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறமோ இல்லையோ இந்த மிட் நைட் மார்னிங் மசாலா பார்த்தே தீரனும் அப்பிடி ஒரு ஈர்ப்பு . அட ஆமாங்க உங்களுக்கே தெரியும் ல என்ன நடக்கும் என்று . மஹத் இல்லாத மசாலாவே இருக்காது யாஷிகா மஹத் சண்டை என்றால் என்ன மஹத்தை வைத்து செய்யாமல் விடுவார்களா என்ன ? அதே போல தான் நம்ம பாலாஜியையும் வைச்சி செய்யப்பட்டிருக்கின்றார் . அது ஒரு […]
வெளியில் வரட்டும்.. பழிவாங்கப்போறேன்! மஹத்தின் காதலி
நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மஹத்தின் காதலி பிராச்சி ஆரம்பத்தில் இருந்தே மஹத்திற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். “அவரின் வயதில் வீட்டில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.. அது பெண்களாக இருந்தாலும், பழகுவதில் என்ன தவறு?” என […]
யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்
தெல்லிப்பழை மருத்துவமனையில் நேற்றுமுன்தினமிரவு கடமையில் இருந்த மருத்துவருடன் மதுபோதையில் சென்ற பொலிஸார் தகாத வார்த்தைகளால் கதைத்துக் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்த மூதாட்டி ஒருவரை 9 மணியளவில் முச்சக்கர வண்டிச் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூதாட்டியைப் பொறுப்பேற்ற மருத்துவர் மூதாட்டிக்கு என்ன நடந்தது என்று வினவியுள்ளார். மூதாட்டிக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியாது, ஆனால் மூதாட்டியை காங்கேசன்துறைப் பொலிஸாரே ஏற்றியனுப்பினர் என்று முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்துள்ளார். […]
கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோருக்கிடையிலான மோதலும் ஒன்று. எனினும் அண்மைய காலங்களாக நடந்து வரும் சில சம்பவங்கள், குறித்த […]
கிளிநொச்சியில் இரவு வேளையில் ஏற்பட்ட பதற்றத்திற்கு காரணம் என்ன?
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இதில், குறித்த சாரதி பந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றுள்ளார். குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் […]





