அர்ஜூன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மத்திய வங்கி முறி விசாரணை தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட தொடர்பாடல் உபகரணங்களை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் திறைசேரி முறி விநியோகம் தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றது.

இதன் போது வழங்கப்பட்ட சாட்சிக்கு அமைவாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை, 2015 தொடக்கம் அர்ஜூன் அலோசியஸ் பயன்படுத்திய தொடர்பாடல் சாதனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *