வடக்கு மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற ஒருவகையான போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால், குறித்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *