மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி! – திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.

“இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்யா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொது எதிரணிக்கு சார்பான தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும், சட்டத்தரணி சங்கங்களும் ஆதரவை வெளியிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *