Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!

டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!

டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்குநோய் ஒழிப்புத் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் இலகுவான முறைகளில் தமது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் குறைப்பு முன்னெடுக்கப்படும்.

ஒவ்வொரு தடவைகளும் மேற்படிப் பரிசோதனைகளுக்காக மக்கள் அதிகளவிலான பணத்தொகையினைச் செலவிட வேண்டியுள்ளதைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் ரூபா 750 – 800 கட்டணம் 250/= ரூபாய் வரையில் குறைப்பதற்கும், முழுஅளவிலான இரத்த பரிசோதனைக்காக (Full blood count) அறவிடப்படும் ரூபா 3000 – 4000 கட்டணம் ரூபா 1000/= ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தனியார் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டணத்தை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …