இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற கடும் நிபந்தனைக்கு அமையவே படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன.
கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.