Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! – ஹக்கீம்

ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! – ஹக்கீம்

ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதெனவும், இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, அண்மைய காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட அமைச்சர், இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …